/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 765 டன் கொப்பரை கொள்முதல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 765 டன் கொப்பரை கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 765 டன் கொப்பரை கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 765 டன் கொப்பரை கொள்முதல்
ADDED : ஏப் 03, 2024 06:54 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் ஆக., வரை 765 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் விற்பனைக்குழு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் நடப்பாண்டில் 765 டன் அரவைக் கொப்பரை ஆதார விலைத் திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
மத்திய அரசால் 2023ல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான அரவைக் கொப்பரைக்கு கிலோ ரூ.111.60 என்ற விலையில் ஆக., வரை கொள்முதல் பணி நடக்கிறது.
மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பொறுப்பாளரை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்து நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

