sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராஜபாளையம் ----ராமேஸ்வரம் பஸ் பரமக்குடியில் நிறுத்தம் 

/

ராஜபாளையம் ----ராமேஸ்வரம் பஸ் பரமக்குடியில் நிறுத்தம் 

ராஜபாளையம் ----ராமேஸ்வரம் பஸ் பரமக்குடியில் நிறுத்தம் 

ராஜபாளையம் ----ராமேஸ்வரம் பஸ் பரமக்குடியில் நிறுத்தம் 


ADDED : ஆக 21, 2024 08:50 AM

Google News

ADDED : ஆக 21, 2024 08:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், -ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ் பரமக்குடியுடன் நிறுத்தப்படும் நிலையில் ராமேஸ்வரம் வரை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு ராஜபாளையத்திற்கு பஸ் இயக்கப்பட்டது.

இந்த பஸ் ராமநாதபுரத்தில் காலை 8:20 மணிக்கு வந்து ராஜபாளையம் செல்லும்.

மீண்டும் ராஜபாளையத்தில் இருந்து வரும் பஸ் இரவு 8:30 மணிக்கு ராமநாதபுரம் வந்து அங்கிருந்து 9:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த பஸ் ராமநாதபுரம், பரமக்குடி, பார்த்திபனுார், கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக ராஜபாளையம் வரை இயக்கப்பட்டது.

இதில் விவசாயிகள் ராஜபாளையம் மார்க்கெட் செல்வதற்கும், வியாபாரிகள், கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்த பஸ் பயன்பட்டு வந்தது.

ராமேஸ்வரம் கிளையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் சேவை கமுதி கிளைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதனால் கமுதியிலிருந்து இயக்கப்படும் ராஜபாளையம் பஸ் இரவு நேரங்களில் பரமக்குடியுடன் நிறுத்தப்படுகிறது.

இதனால் தொலை துாரத்தில் ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை வரும் பக்தர்கள் பரமக்குடியில் இறங்கி வேறு பஸ் மாறி வர வேண்டிய சூழல் உள்ளது. ராமநாதபுரத்திற்கு வரும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை பழையபடி ராமேஸ்வரம் வரை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us