sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் குப்பை கிடங்கில் தீயால் புகை பரவி மக்கள் அவதி

/

ராமநாதபுரம் குப்பை கிடங்கில் தீயால் புகை பரவி மக்கள் அவதி

ராமநாதபுரம் குப்பை கிடங்கில் தீயால் புகை பரவி மக்கள் அவதி

ராமநாதபுரம் குப்பை கிடங்கில் தீயால் புகை பரவி மக்கள் அவதி


ADDED : ஜூன் 19, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம்சக்கரகோட்டை அருகே நகராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பற்றி புகைமண்டலம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் சுகாதாரக்கேட்டில் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் நகராட்சிக்குசக்கரகோட்டைஅருகே கிழக்கு கடற்கரைச்சாலைப் பகுதியில் 25 ஏக்கரில்குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது.இங்கு சேரும் குப்பையை சுகாதார முறைப்படி வேதிப்பொருள் கலந்து மக்கவைக்க வேண்டும் என்பது அரசு விதி.

ஆனால் அதுபோன்று செய்யாமல் வழக்கம் போல் குப்பையை தீவைத்துஎரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மண்டலம்குப்பைக்கிடங்கின் அருகில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சி குடியிருப்புபகுதிகளில் சூழ்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

ஒரு வாரமாக குப்பைக்கிடங்கிலிருந்து புகை வெளியேறி இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதன் அருகில் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, நர்சரி பள்ளிகள்என பல பள்ளிகளும் அமைந்துள்ளன.

வயதானவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயைஅணைத்து புகையைகட்டுப்படுத்துவதில்நகராட்சியின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளதாகமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குப்பை கிடங்கில் தீ வைக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்ட போதுராமநாதபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீயை அணைத்து புகைபரவலை தடுக்க நடவடிகை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us