sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்

/

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி  கூடாரமானது ராமநாதபுரம் ஊருணிகள்


ADDED : மே 07, 2024 11:18 PM

Google News

ADDED : மே 07, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர், கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதரமாக உள்ள ஊருணிகள் பராமரிக்கப்படாமல் சாக்கடை கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக மாறியுள்ளன.

ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அருகேயுள்ள சக்கரகோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் ஊருணிகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்த ஊருணி தண்ணீரை மக்கள் குளிக்க, துணி துவைக்க பயன்படுத்தினர். நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதராமாகவும் ஊருணிகள் உள்ளன.

இந்நிலையில் பல ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விட்டுள்ளனர். அவ்விடங்களில் தண்ணீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து மழைநீர் முழுமையாக சேகரிக்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக சக்கரகோட்டை ஊராட்சியில் ராமேஸ்வரம் மெயின் ரோட்டிலுள்ள சோற்று ஊருணி பராமரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்து 'செப்டிக் டாங்க்' குளமாக மாறி கொசுக்கள் உற்பத்தி கூடாரமாக உள்ளது.

இதன் அருகே குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணியில் கழிவுநீர் கலப்பு, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். கரையை மேம்படுத்தி வேலி அமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us