sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் விசைப்படகு மூழ்கடிப்பு 2 மீனவர்கள் பலி: 2 பேர் மீட்பு கப்பலால் மோதி இலங்கை கடற்படை அட்டூழியம்

/

ராமேஸ்வரம் விசைப்படகு மூழ்கடிப்பு 2 மீனவர்கள் பலி: 2 பேர் மீட்பு கப்பலால் மோதி இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் விசைப்படகு மூழ்கடிப்பு 2 மீனவர்கள் பலி: 2 பேர் மீட்பு கப்பலால் மோதி இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் விசைப்படகு மூழ்கடிப்பு 2 மீனவர்கள் பலி: 2 பேர் மீட்பு கப்பலால் மோதி இலங்கை கடற்படை அட்டூழியம்


ADDED : ஆக 02, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை மோதச்செய்து படகை மூழ்கடித்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்தனர். இருவர் மீட்கப்பட்டனர். இதனை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜூலை 31ல் ராமேஸ்வரத்தில் இருந்து 160 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த போது அன்றிரவு 10:00 மணிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே ரோந்து கப்பலை கார்த்திகேயன் படகு மீது மோதச் செய்தனர். இதில் படகு கடலுக்குள் மூழ்கியது.

படகில் இருந்த மீனவர்கள் மலைச்சாமி 59, ராமச்சந்திரன் 64, மூக்கையா 54, முத்து முனியாண்டி 57, கடலில் மூழ்கினர். சிறிது நேரத்திற்கு பின் காயத்துடன் மூக்கையா, முத்து முனியாண்டியை இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூழ்கி பலியான மலைச்சாமி உடலை இலங்கை வீரர்கள் மீட்டனர். மற்றொரு மீனவர் ராமச்சந்திரன் உடலை தேடி வருகின்றனர்.

இதையறிந்த ராமேஸ்வரம் மீனவர்கள், உறவினர்கள் இரு மீனவர்களை மீட்டு வரவும், உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் நேற்று காலை 10:00 மணிக்கு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் காலை 11:00 மணிக்கு ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர். இதனால் 4 மணி நேரம் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் மீனவர்களை சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி மனைவி

ராஜம்மாளிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

----

*இலங்கை வீரர்கள் மீது கொலை வழக்கு :

கடந்த 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை இந்தியா வென்றதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை படுகொலை செய்தனர். 2021ல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் படகை மூழ்கடித்து 4 மீனவர்களை கொன்றனர்.

தற்போது இருவரை கொலை செய்ததால் இலங்கை கடற்படை வீரர்கள் மீது தமிழகத்தில் கொலை வழக்கு பதிந்து அவர்கள் பயிற்சிக்கு இந்தியா வரும் போது கைது செய்ய வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை சிறை பிடித்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்த இலங்கை அரசு, மீனவர்களையும் கொன்று குவிக்கிறது.

அப்பாவி மக்களை கொல்வது இலங்கைக்கு புதிதல்ல. எனவே இச்சம்பவத்தை மத்திய அரசு கண்டித்து இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் எமிரிட் தெரிவித்தார்.

----






      Dinamalar
      Follow us