/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவருக்கு 29 வரை சிறைக்காவல்
/
ராமேஸ்வரம் மீனவருக்கு 29 வரை சிறைக்காவல்
ADDED : ஆக 21, 2024 01:24 AM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், ஒன்பது பேருக்கு ஆக., 29 வரை காவலை நீட்டித்து, யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும், அதில் இருந்த, ஒன்பது மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் நீதிமன்ற வாய்தா நாளான நேற்று, மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்களின் சிறைக்காவலை, வரும் 29 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 27 நாட்கள் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில், சிறைக்காவல் நீட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியது.

