sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு


ADDED : ஆக 24, 2024 02:20 AM

Google News

ADDED : ஆக 24, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-வங்க கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல இன்று (ஆக.24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்துறையினர் தடையை நீட்டித்தனர்.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்க கடலில் சூறாவளி வீசியதால் ஆக., 21 முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனால் ஆக., 21 முதல் 23 வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் 2ம் கட்டமாக இன்று முதல் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வரையும் அதிகபட்சம் 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி வீச கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.

இச்சூழலில் மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் விளைகுடா கடலில் மீன்பிடிக்கச் செல்வது சிரமம் ஏற்படும் என்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறையினர் தெரிவித்து தடையை நீட்டித்தனர். இதனால் இன்றுடன் 4 நாள்களாக மீனவர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us