/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்
ADDED : மார் 01, 2025 02:56 AM

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பிப். 24 முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
700 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், தேவதாஸ், எமரிட், ராமேஸ்வரம் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், அரசியல் கட்சி பிரமுகர்கள், மீனவப் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாலை 4:00 மணிக்கு மழை பெய்ததால் பந்தலுக்குள் மழைநீர் கசிந்தது.
அதைப்பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் நடந்தது.மீன்கள் விலை உயர்வு: 5 ம் நாளாக நேற்று ஸ்டிரைக் தொடர்ந்ததால் மீன்கள் வரத்தின்றி ராமேஸ்வரம் பகுதியில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
நாட்டுப்படகு, கரை வலையில் சிக்கும் மீன்கள் போதுமானதாக இல்லை. இதனால் வெளமீன், நகரை மீன், பாறை மீன்கள் வழக்கத்தை விட கிலோ ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதலாக வியாபாரிகள் விற்றனர்.