/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை சிறையில் மொட்டையடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்
/
இலங்கை சிறையில் மொட்டையடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்
இலங்கை சிறையில் மொட்டையடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்
இலங்கை சிறையில் மொட்டையடிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் குமுறல்
ADDED : செப் 14, 2024 10:46 PM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து ஆக., 26ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர்.
செப்., 5ல் இவ்வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், மீனவர்கள் மெக்கான்ஸ், 34, மாரியப்பன், 54, சசிகுமார், 45, ஆகிய மூவரும் இரண்டாவது முறை கைதானதால் ஆறு மாதம் சிறை, தலா, 50,000 ரூபாய் அபராதம் விதித்தது.
மற்ற மீனவர்களுக்கு தலா 50,000 அபராதம் விதித்தது. அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்தியதால் மீனவர்கள் ஐந்து பேர் மட்டும் விடுவிக்கப்பட்டு, இவர்கள், நேற்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வந்தனர்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரையும் இலங்கை சிறைத்துறையினர் மொட்டை அடித்ததைக் கண்ட மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமிரிட், மீனவர்களின் உறவினர்கள் பலர் ஆத்திரமடைந்து, தங்கச்சிமடத்தில் மத்திய அரசு, இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இலங்கை சிறையில் நடந்த சம்பவம் குறித்து மீனவர் இன்னாசிராஜா கூறியதாவது:
செப்., 5ல் எங்களுக்கு அபராதம் விதித்ததும், உடனே செலுத்த முடியாமல் போனது. பின், சிறையில் எங்களை இந்திய கைதிகள் என்று கூட பாராமல், எதிரி நாட்டு கைதிகள் போல் பாவித்து மொட்டையடித்து அவமானப்படுத்தினர்.
கழிவுநீர் வாறுகாலை சுத்தம் செய்ய வைத்தும், குப்பை அள்ளச் சொல்லி மிரட்டியும் சித்ரவதை செய்தனர். இதனால் மன உளைச்சலில் ஒருநாள் சாப்பிடாமல் இருந்தோம்.
தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை மோசமாக கையாள்கின்றனர். இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.