/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்தாம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
/
ஐந்தாம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 10, 2024 11:29 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீன் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மீனுக்கு விலையை குறைத்ததைக் கண்டித்து 5ம் நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கும் இறால், கணவாய், நண்டு, காரல், சங்காயம் உள்ளிட்ட மீன்களுக்கு வியாபாரிகள் நியாயமான விலை வழங்காமல் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்தனர். இதனால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஜூலை 6 முதல் வேலை நிறுத்தம் செய்தனர். 5ம் நாளான நேற்றும் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. இருப்பினும் நேற்று 179 சிறிய ரக விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
பெரும்பாலான படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.