sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

/

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'


ADDED : பிப் 24, 2025 02:41 AM

Google News

ADDED : பிப் 24, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர், இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து பிப்., 22ல் சென்ற மீனவர்கள் வழக்கம் போல இந்திய - இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீனவர்களை விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்.

அப்போது, ஐந்து படகுகளை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்து, அதில் இருந்த, 21 முதல் 62 வயது வரையிலான, 32 மீனவர்களை கைது செய்து, மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை கண்டித்து ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், இலங்கை கடற்படை கைது செய்த 32 மீனவர்கள் மற்றும் ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என, தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கிடையே, மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடலோரத்தில் சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, கடத்தல்காரர்கள் சிலர் ஏழு பெட்டிகளை நாட்டுப்படகில் ஏற்ற முயன்றனர். அவர்களை சுங்கத் துறையினர் பிடிக்க முயன்ற போது, பார்சலை போட்டுவிட்டு தப்பினர்.

பார்சலை சோதனையிட்டதில், 6,000 தோல் அலர்ஜி மருந்து பாக்கெட்டுகள் இருந்தன. இவற்றை, படகில் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய்.






      Dinamalar
      Follow us