/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
12 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
/
12 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
12 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
12 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
ADDED : மார் 09, 2025 02:35 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்ற நிலையில் 12 நாட்களுக்கு பின் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.,24 முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பிப்., 28 முதல் மார்ச் 4 வரை ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம், காத்திருப்பு, பிச்சை எடுக்கும் போராட்டம் செய்தனர்.
இதில் சில கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றதால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 12 நாட்களுக்கு பின் நேற்று மீனை பதப்படுத்த ஐஸ் பார்கள், எரிபொருள், உணவு பொருட்களை படகுகளில் ஏற்றினர். அதிக மீன்கள் சிக்கும் என்ற ஆவலுடன் 484 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
பாம்பன் மீனவர்கள் 'ஸ்டிரைக்'
ஐந்து நாட்களுக்கு பின் மார்ச் 7ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து 90 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் ஒரு படகில் இருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பாம்பனில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மீனவர்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச் 9) வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.