sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது

/

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது


ADDED : மே 01, 2024 01:47 AM

Google News

ADDED : மே 01, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் நேற்று திடீரென உள்வாங்கியது. பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியே தெரிந்தன.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அக்னி தீர்த்த கடல் 100 மீ.,க்கு திடீரென உள் வாங்கியது.

இதனால் பாசிப் படர்ந்த பவளப் பாறைகள் வெளியில் தெரிந்தன. மேலும் சிறிய ரக மீன் குஞ்சுகள், கடல் சிப்பிகள் தேங்கி கிடந்த கடல் நீரில் தத்தளித்தன. நீராட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதியம் 12:00 மணிக்கு பின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்தம் இயல்பு நிலைக்கு மாறியது. கோடையில் இது வழக்கமான நிகழ்வுதான் என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us