sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்

/

அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்

அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்

அரசு போக்குவரத்து கழகத்தில்  தகுதிச்சான்று பிரிவு மீண்டும் துவக்கம்


ADDED : ஆக 22, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக தகுதிச் சான்று பிரிவு மீண்டும் செயல்படத் துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை ஆகிய 6 பணிமனைகள் உள்ள நிலையில் இங்கிருந்த தகுதிச் சான்று பிரிவை மூடிவிட்டு இதை விட குறைவான கிளைகளை கொண்ட தேவகோட்டைக்கு தகுதி சான்று பிரிவு மாற்றப்பட்டது.

ராமநாதபுரம் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தகுதிச் சான்றுப் பிரிவு மூடப்பட்டால் மண்டலமாக அறிவிக்கப்படாத நிலை ஏற்படும்.

இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தகுதிச்சான்று பிரிவு முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் லிட், நிர்வாக இயக்குநராக இருந்த மகேந்திரகுமார் மாற்றப்பட்டார். பொன்முடி புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரிடம் தேவகோட்டைக்கு மாற்றப்பட்டது தேவையற்ற செலவு, அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என தொழிற்சங்கங்கத்தினர் முறையிட்டனர்.

இதையடுத்து நேற்று முதல் நிர்வாக இயக்குநர் பொன்முடி உத்தரவின் படி ராமநாதபுரத்தில் தகுதிச் சான்று பிரிவு செயல்பட துவங்கியுள்ளது.

இதனால் பொது மக்களும், அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us