ADDED : ஆக 30, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, - கமுதி பேரையூர் அருகே வரத்துகால்வாயில் நாணல் வளர்ந்து இருப்பதால் வைகை தண்ணீர் பாசனத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்னர்.
பேரையூர் ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு: பேரையூர் கால்நடை மருத்துவமனை அருகே வரத்துக்கால்வாயில் தண்ணீர் செல்வதற்காக சிறுபாலம் அமைக்கப்பட்டது. கால்வாயில் நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் தண்ணீரும் கிராமத்திற்கு செல்வதில்லை. மழைக்காலத்திற்கு முன்பு வரத்துக்கால்வாய் தூர்வாரி நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்றார்.