ADDED : மே 07, 2024 05:11 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே கேளல் தெற்கு தெருவில் சேதமடைந்துள்ள மின்கம்பம் மாற்றம் செய்யப்பட்டது.
முதுகுளத்துார் அருகே கேளல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள்வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பம் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.
கேளல் தெற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இவ்வழியே பள்ளி மாணவர்கள் செல்வதால் ஒருவித அச்சத்துடன் மாணவர்கள், மக்கள் சென்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்து வெளியானது.
இதன்எதிரொலியாக மின்வாரியப் பணியாளர்கள் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட்டனர். இதனால் கிராம மக்கள்மகிழ்ச்சியடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.