sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை

/

காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை

காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை

காஞ்சிரங்குடியில் அங்கன்வாடி ரேஷன் கடை திறக்க கோரிக்கை


ADDED : செப் 07, 2024 05:07 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சியில் 8 மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையம் கட்டடம் மற்றும் ரேஷன் கடைகளுக்கான கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

காஞ்சிரங்குடி ஊராட்சியில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.சேதமடைந்த கட்டடத்தில் அங்கன்வாடி கட்டடம் இயங்கியதால் அதனை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டடம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

தற்போது சேதமடைந்த மற்றொரு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கான கட்டடம் சேதமடைந்ததால் அதனையும் இடித்து விட்டு புதிய கட்டடம் ரூ.20 லட்சத்தில் அமைத்துள்ளனர். காஞ்சிரங்குடியை சேர்ந்த ஜமாஅத் உறுப்பினர் அப்துல் பாசித் கூறியதாவது:

காஞ்சிரங்குடியில் சமீபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் ரேஷன் கடை கட்டடம் புதிதாக கட்டப்பட்டவைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

கடந்த 8 மாதங்களாகாமல் புதிய கட்டடம் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

--






      Dinamalar
      Follow us