sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தடையின்றி தண்ணீர் வழங்க போக்குவரத்து பணியாளர் கோரிக்கை

/

தடையின்றி தண்ணீர் வழங்க போக்குவரத்து பணியாளர் கோரிக்கை

தடையின்றி தண்ணீர் வழங்க போக்குவரத்து பணியாளர் கோரிக்கை

தடையின்றி தண்ணீர் வழங்க போக்குவரத்து பணியாளர் கோரிக்கை


ADDED : ஜூன் 29, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார்--கமுதி ரோடு துாரி அருகே அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. முதுகுளத்துாரில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, சிதம்பரம், ராமேஸ்வரம், விருதுநகர் மற்றும் கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இங்கு டிரைவர், கண்டக்டர் உட்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிகின்றனர். அத்தியாவசிய தேவைக்கு முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் பணிமனைக்கு தண்ணீர் முறையாக வருவதில்லை.

இதனால் இரவில் தங்கும் டிரைவர், கண்டக்டர் உட்பட பணியாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

எனவே முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனைக்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us