ADDED : ஆக 27, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி அருப்புக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் விவசாயி ஞானப்பாண்டி 45. இவரது மாடு மேய்ச்சலுக்காக சென்ற போது சாயல்குடி பெரிய கண்மாயில் உள்ள ஆழமான பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடியது.
சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் முத்து தலைமையில் பசுமாட்டை பாதுகாப்பாக கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

