ADDED : ஜூன் 21, 2024 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டையில், மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு, இரு வீடுகளுக்கு இடையே உள்ள சிறிய சந்து வழியாகச் சென்றபோது சிக்கிக் கொண்டது; நீண்ட நேரம் வெளியே வர முடியாமல் தவித்தது. அதை அறிந்த அப்பகுதி மக்கள், மாட்டை மீட்க முயன்றனர்.
எனினும், முடியாததால், திருவாடானை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி, பசுவை கயிறு கட்டி சிறிது சிறிதாக இழுத்து, உயிருடன் மீட்டனர். வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.