/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு
/
வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு
ADDED : ஆக 03, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி:தொண்டி அருகே நம்புதாளை கடலில் மீனவரின் வலையில் சிக்கிய கடல் பசுவை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை மீனவர்கள் அடைக்கல வேலு 45, பெரியசாமி 34, பரதன் 43, ஆகியோர் நாட்டுப்படகில் நேற்று முன்தினம் இரவு கடலுக்குள் நீண்ட துாரம் சென்று மீன்பிடித்தனர். அப்போது கடல் பசு ஒன்று வலையில் சிக்கியது. அதை வலையிலிருந்து மீட்டு கடலில் விட்டனர்.
மீனவர்கள் கூறுகையில் 'இரு கடல் பசுக்கள் சிக்கின. ஒன்று தாய் பசுவாக இருக்கலாம். அது தப்பிச் சென்றது. வலையில் சிக்கிய 50 கிலோ கொண்ட குட்டி கடல் பசுவை மீட்டு கடலில் பாதுகாப்பாக விட்டோம். இதனால் வலை சேதமடைந்துவிட்டது' என்றனர்.