ADDED : ஜூலை 05, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சாலைத்தெருவில் ரோட்டின் இருபுறங்களிலும் கண்டபடி வாகனங்களை நிறுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ராமநாதபுரம் சாலைத்தெருவில் ஓட்டல்கள், மீன் மார்க்கெட், வங்கி என நிறைய வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த ரோட்டில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் நடை பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
டூவீலர்களை ரோட்டில் இருபுறங்களில் நிறுத்துகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.