sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

/

மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்


ADDED : ஆக 08, 2024 10:42 PM

Google News

ADDED : ஆக 08, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ரூ.10 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.

ஆக.31ல் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் விசைப்படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்ததில் மீனவர்கள் மலைச்சாமி, ராமச்சந்திரன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் மலைச்சாமி உடலை மீட்ட இலங்கை கடற்படையினர் ஆக.3ல் ராமேஸ்வரத்திற்கு அனுப்பினர்.

காணாமல் போன மீனவர் ராமச்சந்திரன் உடலை மீட்கவும், குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி நேற்று கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மீனவர் ராமச்சந்திரன் மனைவி கணபதியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் வில்லாயுதம் உட்பட பலர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us