sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொண்டி, தேவிபட்டினம் கடலில் பாதுகாப்பு ஒத்திகை

/

தொண்டி, தேவிபட்டினம் கடலில் பாதுகாப்பு ஒத்திகை

தொண்டி, தேவிபட்டினம் கடலில் பாதுகாப்பு ஒத்திகை

தொண்டி, தேவிபட்டினம் கடலில் பாதுகாப்பு ஒத்திகை


ADDED : செப் 05, 2024 05:10 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி, : தொண்டி முதல் தேவிபட்டினம் வரை கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் சகார் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

கடல் வழியாக முன்பு பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தேவிபட்டினம் எஸ்.ஐ.,க்கள் அய்யனார், கதிரவன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மரைன் போலீசார் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி போன்ற கடலோரங்களில் ஆய்வு செய்தனர்.

படகில் கடலுக்குள் சென்று மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர்.

அந்நியர்கள், பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us