/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
/
கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
கடலுக்குள் 40 அடி ஆழத்தில்தேசியக்கொடி ஏற்றி சல்யூட்
ADDED : ஆக 16, 2024 01:15 AM

ராமநாதபுரம்:நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டு ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்கள் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர தினம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ தலைமையில் 10ஸ்கூபா டைவிங் வீரர்கள் ராமேஸ்வரம் வந்தனர்.
இவர்கள் தமிழக அரசு மீன்வளத்துறையினருடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ.,ல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டனர். கடலுக்குள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். பயிற்சியாளர் கடந்த சில ஆண்டுகளாக கடல் பாதுகாப்பு, கடலில் பிளாஸ்டிக் கலப்பதை தடுப்பதற்காகவும் இதுபோன்ற பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் செய்து காட்டியுள்ளார்.

