/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழவர் மையத்தில் குவிந்த குப்பையால் சுகாதாரக்கேடு
/
உழவர் மையத்தில் குவிந்த குப்பையால் சுகாதாரக்கேடு
ADDED : ஜூன் 18, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரம் உழவர் மையம் நுழைவுப்பகுதி குப்பை கொட்டும் இடமாகியுள்ளதால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் லேத்தஸ் பங்களா ரோட்டில் உள்ள வேளாண் அலுவலகம் வளாகம், உழவர் மையத்திற்கு தினமும் பணியாளர்கள், விவசாயிகள் பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உழவர் மையம் நுழைவுப்பகுதி குப்பை கொட்டும் இடமாகியுள்ளது.
இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சமூக விரோதிகள் இங்கு புகைப்பிடித்தால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்ற வேளாண் அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.