sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வாரச்சந்தையில் பொருட்கள் எடை மோசடி

/

வாரச்சந்தையில் பொருட்கள் எடை மோசடி

வாரச்சந்தையில் பொருட்கள் எடை மோசடி

வாரச்சந்தையில் பொருட்கள் எடை மோசடி


ADDED : ஜூலை 23, 2024 04:51 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் முத்திரையிடப்படாத எடை கற்கள் பயன்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் திருவாடானை, சின்னக்கீரமங்கலம், வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

விலை மலிவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாங்க வரும் கிராம மக்களை வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

வாரச்சந்தைக்கு மதுரை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பல பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும், தொண்டி, ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீன் வியபாரிகளும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இதில் பெரும்பாலான வியாபாரிகள் முறையாக முத்திரை இடாத எடை கற்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் எடை குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டினர்.

மக்கள் கூறுகையில், விலை சற்று குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்க செல்லும் மக்களை மீன் மற்றும் காய்கறி வியாபாரிகள் எடை குறைவாக கொடுத்து ஏமாற்றுகின்றனர். கிலோவிற்கு 100 முதல் 200 கிராம் வரை குறைவாக உள்ளது.

சம்பந்தபட்ட அதிகாரிகள் முத்திரை இடாத எடை கற்களை பறிமுதல்செய்வதுடன் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us