/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : ஆக.16க்கு தள்ளி வைப்பு
/
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : ஆக.16க்கு தள்ளி வைப்பு
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : ஆக.16க்கு தள்ளி வைப்பு
பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : ஆக.16க்கு தள்ளி வைப்பு
ADDED : ஆக 04, 2024 06:06 AM
ராமநாதபுரம் : பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை ஆக.16க்கு தள்ளி வைக்கப்பட்டது.
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நகராட்சி 3--வது வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க முன்னாள் நகர் அவைத்தலைவர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் விசாரித்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அ.தி.மு.க., நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை இதை ரத்து செய்தது.
இதில் சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது.
அன்னலட்சுமி உமா, கயல் விழிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி இன்ஸ்பெக்டர் கீதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் 5 பேர் மீதான வழக்கு நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிகாமணி உட்பட 5 பேரும் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத்வழக்கு விசாரணையை ஆக.16 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.