sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: சப்-கலெக்டர் நடவடிக்கை

/

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: சப்-கலெக்டர் நடவடிக்கை

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: சப்-கலெக்டர் நடவடிக்கை

மணல் கடத்தல் லாரி பறிமுதல்: சப்-கலெக்டர் நடவடிக்கை


ADDED : ஜூலை 01, 2024 10:28 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:-பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் அதிகாரிகளுடன் மணல் கடத்தலை தடுக்க களமிறங்கிய நிலையில் மணல் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடக்கிறது. பரமக்குடி அருகே எஸ்.காவனுார், தென்பொதுமக்குடி, தோளூர், விளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது.

இதையடுத்து ஜூன் 28 மாலை முதல் இரவு வரை பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கிராமங்களில் வாகன சோதனை மேற்கொண்டார். உடன் தாசில்தார் சாந்தி, பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், துணை தாசில்தார் ஐயப்பன், ஆர்.ஐ., வேம்புராஜ், வி.ஏ.ஓ.,க்கள் விஜயராகவன், இளங்கோ, சரவணன் சென்றனர்.

அப்போது மணல் கடத்தலில் தொடர்புடைய டிப்பர் லாரி கைப்பற்றப்பட்டு பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us