/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புகையிலை பொருட்கள் பறிமுதல்; ரூ.50,000 அபராதம் விதிப்பு
/
புகையிலை பொருட்கள் பறிமுதல்; ரூ.50,000 அபராதம் விதிப்பு
புகையிலை பொருட்கள் பறிமுதல்; ரூ.50,000 அபராதம் விதிப்பு
புகையிலை பொருட்கள் பறிமுதல்; ரூ.50,000 அபராதம் விதிப்பு
ADDED : செப் 04, 2024 01:04 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் கீழக்கரை துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி, பாலா ஆகியோர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களின் பாக்கெட்டுகள் இரண்டரை கிலோ கைப்பற்றப்பட்டது. வடக்கு தெரு மணல்மேடு பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை டூவீலரில் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதே போல் ஏர்வாடி முக்கு ரோட்டில் உள்ள கடையில் விற்பனை செய்ததையடுத்து கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் கடை லைசென்ஸ் ரத்து செய்வதோடு கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என உணவு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறினர்.