நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 -26 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மற்றும் மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் லதா ரமணி தலைமை வகித்தார். மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் மனோகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய எஸ்.எம்.சி., தலைவராக ரியாஸ்கான், துணைத்தலைவராக பாத்திமா, முன்னாள் மாணவர்களின் உறுப்பினராக பைரோஸ்கான் உட்பட 24 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர் முத்துக்குமார் செய்திருந்தார். ஆசிரியர் ஜெயபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.