ADDED : மே 20, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே நோக்கன்கோட்டை செல்வவிநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றது.
யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நோக்கன்கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.

