sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரிவாளுடன் ரோந்து சென்ற எஸ்.ஐ.,; தகராறில் ஈடுபட்ட கிராம மக்கள்

/

அரிவாளுடன் ரோந்து சென்ற எஸ்.ஐ.,; தகராறில் ஈடுபட்ட கிராம மக்கள்

அரிவாளுடன் ரோந்து சென்ற எஸ்.ஐ.,; தகராறில் ஈடுபட்ட கிராம மக்கள்

அரிவாளுடன் ரோந்து சென்ற எஸ்.ஐ.,; தகராறில் ஈடுபட்ட கிராம மக்கள்

1


ADDED : ஆக 01, 2024 11:33 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:33 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டையில் மணல் திருட்டை தடுக்க லுங்கி அணிந்து கையில் அரிவாளுடன் ரோந்து சென்ற போலீஸ் எஸ்.ஐ., சித்திரைவேலு, மற்றும் போலீசாருடன் கிராம மக்கள் தகராறில் ஈடுபட்ட பழைய வீடியோ பரவுகிறது.

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., சித்திரைவேலு மற்றும் போலீஸ்காரர் கருப்பசாமி உள்ளிட்ட 4 பேர் கடந்த ஜூன் மாதம் மேலக்கோட்டை கிராமத்தில் இரவு நேரத்தில் மணல் திருடர்களை பிடிக்க சீருடை அணியாமல்லுங்கி, டவுசர் அணிந்து, பாதுகாப்பிற்காக கையில் அரிவாளுடன் சென்றனர்.

சந்தேகமடைந்த ஊர் மக்கள் அவர்களிடம் விசாரித்து தகராறில் ஈடுபட்டனர். இளைஞர்கள் சிலர் தாக்க முயன்றனர். அப்போது எஸ்.ஐ., சித்திரைவேலு தாங்கள் போலீசார் எனக்கூறினார். அதை நம்பால் போலீஸ் என்றால் எதற்காக லுங்கி, அரிவாளுடன் வந்தீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அடையாள அட்டையை காட்டிய போதும் நம்பாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று போலீசாரை மீட்டனர். அப்போது பதிவு செய்த வீடியோ தற்போது மாவட்டத்தில் பரவி வருகிறது.

சித்திரைவேலு கூறுகையில், இரவில் கடத்தல்காரர்களை பிடிக்க காட்டிற்குள் போகும் போது முட்செடிகளை அகற்ற அரிவாளை எடுத்துச்செல்வோம். அந்த பகுதியில் தொடர்ந்து மணல் திருடர்களை கைது செய்ததால் இந்த பழைய வீடியோவை பரப்புகின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us