/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜெலட்டின் கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
/
ஜெலட்டின் கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
ஜெலட்டின் கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
ஜெலட்டின் கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
ADDED : ஆக 30, 2024 09:47 PM
திருவாடானை:புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரத்திற்கு 400 ஜெலட்டின், டெட்டனேட்டரை கடத்தி வந்தவர்களை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைப்பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு ஜெலட்டின் கடத்தி வருவது வழக்கமாக உள்ளது. கடலில் வெடிவைத்து மீன்பிடிப்பதற்காக இச்செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். ஆக.,28ல் புதுக்கோட்டையில் இருந்து டூவீலரில் இருவர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயரை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர்.
வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கிய போது மூட்டை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறியது. போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ. சுல்த்தான்இப்ராஹிம் தலைமையில் 5பேர் கொண்ட தனிப்படை அமைக்கபட்டுள்ளது. இவர்கள் புதுக்கோட்டை உட்பட பல்வேறுமாவட்டங்களுக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.