sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜாமினில் விடுவிக்க ரூ.2000 லஞ்சம் எஸ்.எஸ்.ஐ.,கைது

/

ஜாமினில் விடுவிக்க ரூ.2000 லஞ்சம் எஸ்.எஸ்.ஐ.,கைது

ஜாமினில் விடுவிக்க ரூ.2000 லஞ்சம் எஸ்.எஸ்.ஐ.,கைது

ஜாமினில் விடுவிக்க ரூ.2000 லஞ்சம் எஸ்.எஸ்.ஐ.,கைது


ADDED : மே 17, 2024 01:18 AM

Google News

ADDED : மே 17, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:வழக்கிலிருந்து ஜாமினில் விடுவிப்பதற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் 55, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் வேல்முருகன் 42. லாரி உரிமையாளர். இவருடைய மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை சம்பந்தமாக உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டது.

இதில் வேல்முருகன் புகாரில் முகேஷ் 21, உள்ளிட்ட 2 பேர் மீதும், முகேஷ் புகாரில் வேல்முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒருவர் புகாரில் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமினில் விடுவிக்கவும் வேல்முருகனிடம் எஸ்.எஸ்.ஐ.,ராமகிருஷ்ணன் ரூ.3000 லஞ்சம் கேட்டார்.

பேரம் பேசப்பட்டதில் ரூ.2000 கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு 8:00 மணிக்கு தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரியில் ராமகிருஷ்ணன் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அங்கு சென்ற வேல்முருகன் ரசாயனம் தடவிய 2000 ரூபாயை கொடுத்தார். ராமகிருஷ்ணன் வாங்கிய போது மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us