/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி
/
கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி
ADDED : பிப் 22, 2025 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிப்.,16ல் தஞ்சாவூரில் கிங் மார்ஷியல் அசோசியேஷன் சார்பில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.
பங்கேற்ற 16 மாணவர்களும் வெற்றி பெற்றனர். மாணவர்கள், கராத்தே பயிற்சியாளர் சசிக்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் பாண்டி, முதல்வர் உமாராணி, நிர்வாக அலுவலர் கதிரேசன் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.