ADDED : ஜூலை 08, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் காந்திநகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் 41. இவர் ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டில் மாணவர்கள் சிலருக்கு டியூஷன் எடுத்துள்ளார். இதில் படித்த 9ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் ராமேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர் ராஜசேகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.