sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பலியான மீனவர் உடல் ராமேஸ்வரம் வந்தது

/

பலியான மீனவர் உடல் ராமேஸ்வரம் வந்தது

பலியான மீனவர் உடல் ராமேஸ்வரம் வந்தது

பலியான மீனவர் உடல் ராமேஸ்வரம் வந்தது


UPDATED : ஆக 03, 2024 11:05 PM

ADDED : ஆக 03, 2024 11:04 PM

Google News

UPDATED : ஆக 03, 2024 11:05 PM ADDED : ஆக 03, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-இலங்கை கடற்படை கப்பல் மோதி படகு மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் உடல் இருநாட்டு கடற்படை கப்பலில் நேற்று அதிகாலை ராமேஸ்வரம் வந்தது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை.31ல் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து கப்பலில் மோதினர். இதில் மீனவர் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். இவரது உடலை மீட்ட இலங்கை கடற்படை வீரர்கள் நேற்று முன்தினம் இந்திய துணை துாதரக அதிகாரி சாய்முரளியிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின் இலங்கை- இந்திய கடற்படை கப்பலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் கடற்கரைக்கு உடல் கொண்டு வரப்பட்டது. பின் மீனவர் உடலை உறவினர்களிடம் மரைன் போலீசார் ஒப்படைத்தனர். ஹிந்து முறைப்படி மீனவர் மலைச்சாமி உடல் தகனம் செய்யப்பட்டது.

மலைச்சாமி உடலுடன் இலங்கை கடற்படை வீரர்கள் மீட்ட மீனவர்கள் மூக்கையா, முத்துமுனியாண்டியையும் ராமேஸ்வரம் அனுப்பினர்.

இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராமச்சந்திரன் உடலை 3ம் நாளாக நேற்றும் ரோந்து கப்பல் மற்றும் மீனவர்கள் மூலம் தேடியதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

மீனவர்கள் வீடு திரும்பினர்


ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நெடுந்தீவு அருகே ஜூலை 1 ல் மீன்பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்தனர். இதில் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த 6 மீனவர்களும் இருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 மீனவர்கள் ஜூலை 30 ல் விடுவிக்கப்பட்டனர். இதில் நம்புதாளை மீனவர்களின் படகின் உரிமையாளர் பெரியசாமி 56, தவிர மற்ற மீனவர்கள் குமரன் 39, பாண்டி 39, பழனி 40, ராமமூர்த்தி 34, ஆறுமுகம் 44, ஆகியோர் நேற்று காலை வீடு திரும்பினர்.

நாட்டுப்படகு மீனவர் சங்க பொருளாளர் ஆறுமுகம் கூறுகையில்'' இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. நம்புதாளை மீனவர் பெரியசாமியையும் விடுதலை செய்ய வேண்டும் ''என்றார்.






      Dinamalar
      Follow us