/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்
/
கச்சத்தீவில் தஞ்சமடைந்த மீனவர்கள் சென்னை வந்தனர்
ADDED : ஆக 30, 2024 03:02 AM
ராமேஸ்வரம்:நடுக்கடலில் படகு மூழ்கியதில் இலங்கை கச்சத்தீவில் தஞ்சமடைந்து மீட்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இருவர் நேற்று விமானத்தில் சென்னை வந்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஆக.26ல் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் டெல்வின்ராஜ், சுரேஷ் நீந்தி இலங்கை கச்சத்தீவில் தஞ்சமடைந்தனர்.
மற்ற மீனவர்கள் எமரிட், வெள்ளைச்சாமி கடலில் மூழ்கினர். இதில் கடலில் மிதந்த எமிரிட் உடலை நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீட்பு குழு மீனவர்கள் மீட்டு கரைக்கு வந்தனர். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மீனவர்கள் டெல்வின்ராஜ், சுரேஷ் இருவரையும் இலங்கை கடற்படை வீரர்கள் இந்திய துாதரக அதிகாரியிடம் ஒப்படைத்த நிலையில் நேற்று இருவரும் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தனர்.
இவர்களை மீன்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.

