sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

/

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்

அரசின் மெத்தனப் போக்குதான் கள்ளச்சாராய பலிக்கு காரணம்


ADDED : ஜூன் 23, 2024 09:38 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 09:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம், : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்எஸ்.டி.பி.ஐ., கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வந்திருந்தார். அவர் பேசியதாவது:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை உயர்த்திவழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் முதல் அனைவரையும் கைது செய்து கடுமையானதண்டனை வழங்க வேண்டும்.

அரசின் மெத்தன போக்கே இவ்வளவு உயிர் பலிக்கு காரணம். கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை போகும் அதிகாரிகள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக வலைதளங்களில் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜமீலு நிஷா, சோமு உட்பட பலர்பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us