/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஈசுபுளி வலசையில் கூரை செட் தீப்பிடித்து எரிந்தது
/
ஈசுபுளி வலசையில் கூரை செட் தீப்பிடித்து எரிந்தது
ADDED : ஜூன் 22, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே குதக்கோட்டை ஊராட்சி ஈசுபுளி வலசையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு கூரை செட் தீப்பற்றி எரிந்தது.
ஈசுபுளிவலசையை சேர்ந்தவர் பெயின்டர் முருகேசன் 50. இவரது வீட்டின் முன்புறம் சமையலுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓலை குடிசை ஷெட்டில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானது.
இதில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.