ADDED : மே 26, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளி வீசுகிறது. இதனால் நேற்று காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் திடீரென கடல் 100 மீ., உள்வாங்கியது.
கடற்கரையில் மீனவர்கள் நிறுத்தியிருந்த சிறிய ரக நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன. பின் மதியம் 12:00 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் படகுகள் மீண்டும் மிதந்தன.
தற்போது வீசும் சூறாவளிக்கு கடல் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.