ADDED : ஆக 04, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன.
தொண்டி கடல் நேற்று காலை உள்வாங்கியது. இக்கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்துவது வழக்கம். கடல் உள் வாங்கியதால் பல படகுகள் தரைதட்டி நின்றன. மீனவர்கள் படகுகளை தரையிலிருந்து கடலுக்குள் தள்ளி சென்று மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கூறுகையில், 75 அடி துாரத்திற்கு கடல் உள் வாங்கியிருந்தது. காலை 11:00 மணிக்கு மேல் கடல் மீண்டும் வழக்கமான நிலையை அடைந்தது என்றனர்.