/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாத அவலம் ஓரம் கட்டப்பட்ட அவலம்
/
கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாத அவலம் ஓரம் கட்டப்பட்ட அவலம்
கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாத அவலம் ஓரம் கட்டப்பட்ட அவலம்
கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாத அவலம் ஓரம் கட்டப்பட்ட அவலம்
ADDED : பிப் 26, 2025 07:09 AM
திருவாடானை: கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாததால் வாகனம் இயக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டதால் அவசர உதவி கிடைக்காமல் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கால்நடை வளர்ப்போர் வசதியை கருத்தில் கொண்டு கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு சார்பில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவை துவக்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணம், மருந்து ஆகியவை இருக்கும்.
ஒரு கால்நடை டாக்டர், உதவியாளர், டிரைவர் ஆகியோர் இருப்பர். நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் 1962 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக அழைத்தால் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
அதனை தொடர்ந்து அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் திருவாடானையில் இயங்கி வந்த ஆம்புலன்சுக்கு இரண்டு மாதத்திற்கு மேலாக கால்நடை டாக்டர் மற்றும் உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் வாகனம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில், கிராமங்களில் தற்போது ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் உள்ளது.
அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றனர்.

