sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம்

/

உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு நாளை திருக்கல்யாணம்


ADDED : செப் 04, 2024 01:33 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு இரு தேவியருடன் நாளை (செப்.5) திருக்கல்யாணம் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த மூலவர் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் வெயிலுகந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

மேலும் சீதா பிராட்டியை மீட்பதற்காக ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன் இந்த விநாயகரை வணங்கி சென்றதாக கூறப்படுவதால் சிறப்புமிக்க கோயிலாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது.

இங்கு ஆக.29 ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.

எட்டாம் நாளான நாளை மாலை 4:30 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us