sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணி கோவிலில் நகைகள் மாயம் ஸ்தானிகர் சகோதரரிடம் தீவிர விசாரணை

/

திருப்புல்லாணி கோவிலில் நகைகள் மாயம் ஸ்தானிகர் சகோதரரிடம் தீவிர விசாரணை

திருப்புல்லாணி கோவிலில் நகைகள் மாயம் ஸ்தானிகர் சகோதரரிடம் தீவிர விசாரணை

திருப்புல்லாணி கோவிலில் நகைகள் மாயம் ஸ்தானிகர் சகோதரரிடம் தீவிர விசாரணை


ADDED : மே 16, 2024 02:14 AM

Google News

ADDED : மே 16, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் ஸ்தானிகர் சீனிவாசனின் அண்ணன் தெய்வச்சிலை ராமசாமியிடம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் ஆதிஜெகநாத பெருமாள் மற்றும் பத்மாசனி தாயாருக்கு அணிவிப்பதற்காக உள்ள மொத்த நகைகளில் 952 கிராம் எடை தங்க நகைகள், 1,199 கிராம் வெள்ளி நகைகள் மாயமாகின. இவற்றின் மதிப்பு 1 கோடி ரூபாய்.

தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின்படி, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நகை பொறுப்பாளர் கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணிபுரிந்த கோவில் ஊழியர்கள் ராமு, பாண்டி, சாமித்துரையிடமும் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக முன்னாள் திவான் மகேந்திரனிடம் இரு முறை விசாரணை நடத்தினர்.

ஸ்தானிகர் சீனிவாசன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இரு முறை கேட்ட முன் ஜாமின் மனுக்களையும் நீதிபதி குமரகுரு தள்ளுபடி செய்தார். இதற்கிடையே, சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு செய்துள்ளார்.

ஓய்வு பணியாளர்:

வழக்கில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் கோவிலில் 1981 முதல் 30 ஆண்டுகளாக நகைகள் மற்றும் உண்டியல் பிரிவின் நிர்வாக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரித்தனர். மேலும், தெய்வச்சிலை ராமசாமியை வரவழைத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரம் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us