sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்


ADDED : மார் 06, 2025 04:15 AM

Google News

ADDED : மார் 06, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி: தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பெருநாழி முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் விரிவுபடுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பில் மூன்று கட்ட போராட்டம் நடத்த மாநில மையத்தால் முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக மார்ச் 12ல் அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு மற்றும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்.,4ல் அனைத்து ஊராட்சி செயலர்கள் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு செய்கின்றனர்.

மூன்றாம் கட்டமாக ஏப்., 21 முதல் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையரகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டங்களில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டு கோரிக்கை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us