/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்
/
திருவெற்றியூர் கோயில் தேரோட்டம்
ADDED : ஏப் 23, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது.
இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் மணிகண்டன், வல்மீகநாதன் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 10:00 மணிக்கு கோயில் முன் தேர் நிறுத்தபட்டு மீண்டும் மதியம் 3:30 மணிக்கு துவங்கி 5:00 மணிக்கு நிலையை அடைந்தது. செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

