/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆக., 27ல் மறியல் நடத்த முடிவு
/
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆக., 27ல் மறியல் நடத்த முடிவு
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆக., 27ல் மறியல் நடத்த முடிவு
போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆக., 27ல் மறியல் நடத்த முடிவு
ADDED : ஆக 03, 2024 10:01 PM
ராமநாதபுரம்,:-தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 27ல் கோட்ட தலைமை அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம், செப்., இரண்டாவது வாரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் 95,000 ஓய்வூதியர்கள், 5,000 குடும்ப ஓய்வூதியர்கள் என ஒரு லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 104 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 2022 டிச., முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
பிற துறைகள் போல மாதம் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் வழங்குவதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆக.,15 முதல் 25 வரை ஓய்வூதியர்களை நேரில் சந்தித்தும் அப்பகுதி பொதுமக்களுக்கும் நோட்டீஸ் வழங்கி பிரசாரம் செய்கின்றனர்.
அதன் பின் ஆக., 27ல் ஒப்பந்த பேச்சு நடக்கும் நாளில் கோட்ட தலைமை அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தவும், செப்., இரண்டாவது வாரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக ஓய்வூதியர் அமைப்பின் காரைக்குடி மண்டல துணை செயலர் மணிக்கண்ணு தெரிவித்தார்.