sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் இஞ்சி பறிமுதல்: கடத்தல்காரர்கள் எஸ்கேப்


ADDED : ஜூன் 14, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்புள்ள இஞ்சியை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.

மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் கடத்தல்காரர்கள் கொண்டு வந்த 60 மூடை பார்சல்களை கடற்கரையில் பதுக்கி வைத்தனர். இதனை சுங்கத்துறையினர் கைப்பற்றி சோதனையிட்டதில் 2 டன் இஞ்சி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம். இதனை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த கடத்தல்காரர்கள் சுங்கத்துறையை கண்டதும் தப்பி ஓடினர்.

இவர்களை பிடிக்க முடியாமல் சுங்கத்துறையும் கோட்டை விட்டது.

இலங்கையில் இஞ்சி, மஞ்சள் விளைச்சல் குறைவு என்பதால் அங்கு மவுசு அதிகம். இதனை ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக படகில் அதிகம் கடத்தி கடத்தல்காரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us